மனை பதிவு செய்ய தமிழ்நாடு அரசு பதிவுத்துறை பதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
பதிவு செய்ய வரும் ஆவணங்கள் குறிப்பிட்டுள்ள சொத்துகளில் உள்ள கட்டிடங்கள் இருப்பதை மறைத்து விட்டு பதிவு செய்கின்றனர்.
இதனால் போலியாக பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றது. மேலும் தமிழ்நாடு அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்படுகின்றது. இதனை சீர்செய்யும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருகின்றது.
இதன் விளைவாக சொத்துகளை பதிவு செய்ய வரும் ஆவணங்களில் குறிப்பிட்டுள்ள சொத்துகளின் புகைப்படம், ஜியோ கோ ஆர்டினேட் மூலம் புகைப்படம் எடுத்து ஆவணமாக இணைக்கப்படவேண்டும். ஜியோ கோ ஆர்டினேட் மூலம் புகைப்படம் எடுக்கும் போது அந்த சொத்தின் புவியியல் சார்ந்த நிலைப்பாட்டினை விவரிக்கும்.
பதிவிற்கு வந்த ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள சொத்தின் நிலத்தில் கட்டிடம் அமைந்திருந்தால், கட்டிடத்தின் மதிப்பைப் பொருத்து முத்திரைத்தாள் கட்டணம் அமையும்.
இதனால் போலியாக பதிவு செய்வதும், தமிழ்நாடு அரசின் வருவாய்க்கு ஏற்படும் இழப்பையும் தடுத்து சீர் செய்து கொள்ள முடியும்.
இந்த நடைமுறையானது அக்டோபர் மாதம் முதல் தேதியிலிருந்து அனைத்து சார் பதிவாளர்கள் அலுவலங்களிலும் பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.