அடுக்குமாடி வீடு விற்பனை பதிவு கட்டணம் குறைப்பு
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பத்திரபதிவுகளுக்கு புதிய நடைமுறை அமல்படுத்த உள்ளனர் அரசு தரப்பில் வந்த செய்தி தெரிவிக்கின்ற்து.
அடுக்குமாடி குடியிருப்பு பத்திரப்பதிவுக்கு புதிய நடைமுறையாக முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவுக்கட்டணம் குறைக்கபடுகிறது என்ற தகவல் அரசின் செய்தி குறிப்பில் அறிய முடிகிறது.
தமிழ்நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்க அதன் நிலத்தினை தனியாக விற்பனை ஆவணமாக பதிவு செய்ய வேண்டும். அதற்கு முத்திரைத்தாள் கட்டணமாக 7% செலுத்தவேண்டும், பதிவு கட்டணமாக 2% செலுத்தவேண்டும்.
கட்டிடம் பதிவு செய்ய அதன் மதிப்பிலிருந்து கட்டுமான ஒப்பந்தம் அவணமாக பதிவு செய்யவேண்டும். இதற்கு 1% மற்றும் பதிவு கட்டணமாக 3% செலுத்தி ஆவணமாக பதிவு செய்து கொள்ளவேண்டும்.
இந்தமுறை த்மிழ்நாட்டில் பதிவுத்துறையில் தற்போது அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்க ஆவணம் பதிவு செய்ய நடைமுறையாக உள்ளது. மற்ற மாநிலங்களில் நிலத்தின் பிரிபடாத பாகத்தின் மதிப்பு மற்றும் கட்டிடம் மதிப்பு இரண்டையும் சேர்த்து கூட்டு மதிப்பாக பதிவு செய்யும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. இதனப்போன்றே தமிழ்நாட்டிலும் பின்பற்றலாம் என்ற முடிவிற்க்கு அரசு வந்துள்ளனர்.
புதிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கி அதனை பதிவு செய்ய காத்திருப்போர்களுக்கு நற்செய்தி!
பிரிபடாதபாகம். மற்றும் கட்டுமான ஒப்பந்தம் என்று இரண்டு வகையான ஆவணங்கள் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இனி இல்லை. அதற்கு பதில் விற்பனை ஆவணம் மூலமாக அடுக்குமாடி குடியிருப்பின் விடு பதிவு செய்து கொள்ளலாம்.
ரூ.50 இலட்சத்திற்கு குறைவான அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு பதிவு செய்ய முத்திரைத்தாள் கட்டணம் 7 % லிருந்து 4% குறக்கப்பட்டுள்ளது.
ரூ.50 இலட்சத்திலிருந்து ரூ.3 கோடி வரையிலான அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளை பதிவு செய்ய முத்திரைத்தாள் கட்டணம் 7% லிருந்து 5% குறைக்கப்பட்டுள்ளது.
ரூ.50 இலட்சத்திற்கு குறைவான அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு விற்பனை ஆவணம் பதிவு செய்ய முத்திரைத்தாள் 4% மற்றும் பதிவுக்கட்டணம் 2% மொத்தம் 6% செலுத்தினால் போதுனாது.
ரூ.50 இலட்சத்திலிருந்து ரூ.3 கோடி வரையிலான அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளை விற்பனை ஆவணம் பதிவு செய்ய முத்திரைத்தாள் 5% மற்றும் பதிவுக்கட்டணம் 2% மொத்தம் 7% செலுத்தினால் போதுனாது.